×

இன்ஸ்டாவில் ஒருவர்; வீடியோ காலில் ஒருவர் ஆபாச புகைப்படங்களை அனுப்பி சிறுமிக்கு டார்ச்சர் : சென்னை வாலிபர் கைது

சென்னை: விருது நகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஏழுமலை மகன் சிவா (19) என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னிடம் ஆசை வார்த்தை கூறி பழகியதால், இருவரும் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்து கொண்டோம். அதைத் தொடர்ந்து வீடியோகாலில் பேசும்போது, சிவா இன்ஸ்டாகிராமில் வைத்துள்ள புகைப்படத்துடன், அவரது தோற்றம் முற்றிலும் வேறுபட்டு காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்து அவரது தொடர்பை துண்டித்து கொண்டேன். ஆனால் அவர் தொடர்ந்து ஆபாச புகைப்படங்களை அனுப்பி, ஆபாசமாக பேசி தொந்தரவு செய்து வருகிறார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்த ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் சென்னை சென்று, வேளச்சேரி பகுதியில் இருந்த சிவாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post இன்ஸ்டாவில் ஒருவர்; வீடியோ காலில் ஒருவர் ஆபாச புகைப்படங்களை அனுப்பி சிறுமிக்கு டார்ச்சர் : சென்னை வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Rajapalayam, Virudhu Nagar district ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையம் பகுதியில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்